
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது
இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி ஆழத்தையும், வசீகரத்தையும் ஒன்றிணைக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜேக்ஸ் பிஜாய் தற்போது திகழ்கிறார்.
சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் ரசிகர்களுடனான உரையாடலின் போது, ஜேக்ஸ் பிஜாயின் ‘லோகா’ படத்திற்கான இசையை பாராட்டினார். பள்ளிச்சட்டம்பி படத்தின் மூலம் டொவினோ தாமசுடன் தனது வெற்றிகரமான பங்களிப்பை தொடர்கிறார். இந்தப் படம் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் ஆகியோர் இணைந்து பணியாற்றும் நான்காவது படமாகும். அவர்கள் இதற்கு முன் ‘குயின்’, ‘ஜன கன மன’ போன்ற படங்களின் சார்ட் பஸ்டர் ஆல்பங்களை வழங்கிய கூட்டணியாகும்.
வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதி, ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்த ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம்- வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films) சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள பீரியாடிக் திரைப்படமாகும்.சானுக்யா – சைதன்யா சரண் தலைமையிலான சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment) நிறுவனத்துடன் இணைந்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் உலக அளவில் ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.