*அம்… ஆ* திரை விமர்சனம்.

அம்.. ஆ.. உணர்வுகளை ஊன்றும் வாடகை தாயின் கதை!


மூன்று மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்து பலரின் மனங்களை தொட்ட “അം… ആ…” திரைப்படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு, ஏப்ரல் 18 முதல் தமிழகத்தில் வெளியாகி உள்ளது. U சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம், வாடகை தாய் வாழ்க்கையின் உணர்வுப் பக்கங்களை விவரிக்கிறது.

கதை சுருக்கம்: மலைப்பகுதியில் தனியாக தனது பேத்தியுடன் வாழும் தேவதர்ஷினியின் வாழ்க்கையில் திடீரென அடியெடுத்து வைக்கும் திலீப் போத்தன். தன்னை ஒரு காண்ட்ராக்டர் என அறிமுகப்படுத்தும் இவர், உண்மையில் யார்? தேவதர்ஷினியுடன் உள்ள குழந்தை யார்? இவர்களுக்குள் என்ன நுணுக்கமான பிணைப்பு? என்றவை கதையின் பரபரப்பான திருப்பமாக அமைகின்றன.

நடிப்பும், இயக்கமும்: திலீப் போத்தனின் எளிமையான நடிப்பும், தேவதர்ஷினியின் உணர்வுப்பூர்வமான அம்மா வேடமும் பாராட்டத்தக்கது. வாடகை தாயின் வாழ்க்கை, அவளது போராட்டங்கள், சட்ட இடர்பாடுகள் ஆகியவற்றை இயக்குநர் செபஸ்டின் தோமஸ் மிகவும் நுணுக்கமாகவும், மனதைத் தொட்டவாறும் படம் பிடித்துள்ளார்.

தொழில்நுட்ப அம்சங்கள்: ஒளிப்பதிவு, இசை, பின்புல பாடல்கள் எல்லாம் இந்த படம் காட்டும் இயற்கையும் உணர்வுகளையும் மேலும் உயர்த்துகின்றன. குறிப்பாக குழந்தை பிரியும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் உள்ளன.

முடிவுரை: அம்.. ஆ.. என்பது வெறும் திரைப்படமல்ல, ஒரு தாய்மையின் உணர்வுகளுக்கு அஞ்சலி. வாடகை தாய்களின் பக்கம் நம்மை நேரில் அழைத்துச் செல்லும் ஒரு வாழ்க்கைப் பயணம்.!

Comments (0)
Add Comment